சென்னை,டிச.17- தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். பணியிடங்களை தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது. அரசு பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு நேரடியாக தேர்வு செய்யும். அது மட்டுமல்லாமல், அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இது மாநில பட்டியல் என்று அழைக்கப்படும். முன்பெல்லாம் மாநில பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், அரசின் வருவாய்த் துறையில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறைகளில் இருந்தும் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வரு கின்றனர். ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நேரடி நிய மனம் மற்றும் மாநில பட்டியல் நியமனம் ஆகிய இரண்டு வகைகளில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில், மாநில பட்டியலில் இருந்து கடந்த 2023க்கான ஐ.ஏ.எஸ். அதிகாரி களாக எஸ்.மாலதி ஹெலன், ஜி.ரவிகுமார், எஸ்.மிருணாளினி ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரை தேர்வு செய்வதற்காக 9 பேர் கொண்ட பட்டியலை கடந்த மாதம் ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுப்பி வைத்தது. அவர் களுக்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் தில்லியில் நடந்தது.
இதனையடுத்து, ஒன்றிய அரசு மூன்று பேரையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நிய மித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுவாக, மாநில பட்டியலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் குறித்த பட்டியலை தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, பட்டியலில் இருப்பவர்களில் யாரை மாநில அரசு விரும்புகிறதோ அவர்களையே ஒன்றிய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு செய்து ஆணை பிறப்பிக்கும்.