சென்னை, ஜூன் 12- அண்ணனை தேடிவந்து, தம்பியை கொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை கரு மாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மா (24). கூலித் தொழிலாளியான இவர், பணி முடித்துவிட்டு செவ்வாயன்று இரவு தனது வீட்டருகே உள்ள ரயில்வே தண்ட வாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தர்மாவிடம் உன் அண்ணன் சூர்யா எங்கே எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு தர்மா, பதில் கூற மறுத்ததை அடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி, பாட்டில் போன்ற ஆயு தங்களைக் கொண்டு தர்மாவை கொடூர மாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை தடுக்க முயன்ற தர்மாவுடன் இருந்த அவரது நண்பர் கிஷோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி யோடியது.
இதையடுத்து அவரது நண்பர்கள் தர்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மா உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழி தீர்க்க இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடிய 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொருக்குப்பேட்டை (எச் 4) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதும், திரு வொற்றியூரில் மாமூல் தகராறில் ரவுடி ராசையா என்பவர் கொலை செய்யப்பட்ட தும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் வடசென்னை பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.