tamilnadu

குடிசை பகுதியில் பணியாற்ற 2,500 தன்னார்வலர்கள் தேர்வு

உள்ளாட்சித்துறை  அமைச்சர்  தகவல்

சென்னை, மே 20- சென்னை குடிசைப் பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணி களில் மாநகராட்சியுடன் இணைந்து பணி யாற்ற 2 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட 30 வார்டுகளில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. மற்றப்  பகுதிகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ்  தொற்று பாதித்த பகுதிகளில் நுண்அள வில் கண்காணித்து தடுப்பு பணிகளை  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்  ளது. அதனடிப்படையில் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநக ராட்சியுடன் இணைந்து தன்னார்வ தொண்டு  நிறுவனங்கள் பணிகளில் ஈடுபட உள்ளன. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட  சுமார் 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்துள்ளன. சென்னையில் ஆயி ரத்து 979 குடிசைவாழ் பகுதிகள் கண்ட றியப்பட்டுள்ளன.  இப்பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் 135 நகர்புற ஆரம்ப சுகா தார மையங்கள் உள்ளன. குடிசைவாழ் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், முகக்கவசம் அணி தல், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவு தல், கூட்டத்தை தவிர்த்தல் மற்றும் தன்  சுத்தம் ஆகியவற்றை குறித்து எடுத்து ரைக்க இந்தத் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் சனிக்கிழமை (மே 23) முதல் களப்பணி களில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்தி  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.