tamilnadu

அரசுப்பள்ளிகளில் 2.17 லட்சம் மாணவர்கள் இதுவரை சேர்ப்பு

சென்னை, மார்ச் 19- தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறை யின் கீழ் 31 ஆயிரத்து 336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்து 29  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களும் செயல்பட்டு வருகிறது.  

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து, வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கைப் பணிகளை துவங்கியது. தனியார் பள்ளிகளின் நவீன தொழில் நுட்ப வசதிகள், பெற்றோருக்கு ஏற்பட்ட சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமுதாய சூழல் காரணமாக, பெற்றோர் மாணவர் களை அதிகளவில் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கைக்கு கிராமப் பகுதிகளுக்குச் சென்று விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கை குறைவாக இருந்துள்ளது.

அரசுப் பள்ளிகள்: இந்நிலையில், தமிழ் நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி களில் மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1 ஆம் தேதி துவங்கி, அரசின் நலத்திட்டங் களாக காலை சிற்றுண்டி, வண்ண மயமான சீருடை, காலணிகள், உயர்கல்வி உதவித் தொகை, திறன்மிகு வகுப்பறை (smart classroom), ஆங்கில மொழி ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளிட்டவற்றை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி மாண வர்களின் சேர்க்கை நடைபெற்று வரு கிறது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தை களின் விரங்களும் பெறப்பட்டு, தொடக் கப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர் கள் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வரு கிறது.

நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை 5 லட்சத் திற்கு மேல் உயர்த்தவும், பள்ளி மேலாண் மைக்குழு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசின் தீவிர நடவடிக்கையால் மார்ச்  1 ந் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாண வர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், காலி பணியிடங்களில் மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் பணிகளை துவக்கியுள்ளது. அரசுப் பள்ளி களில் போதுமான ஆசிரியர்கள் நியமிக் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.