tamilnadu

img

பாதாள சாக்கடை திட்டப் பணி முடிய 2 ஆண்டுகளாகும்: வேலூர் ஆட்சியர்

வேலூர், ஜன.3- வேலூரில் பாதாள சாக்கடை திட்டப் பணி கள் முடிய இரண்டு வருடங்களாகும் என்றும்  அதுவரைக்கும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரி வித்தார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் வேலூர் கோட்டையை பழமை மாறாமல்  பொலிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின்  கீழ் வேலூர் கோட்டையின் அகழியை தூர்வாரும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேலூர் தொகுதி  மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் உடனிருந்தார்.  ஆய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறு கையில்,“வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 29 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பணிகள்  தற்போது தொடங்கப் பட்டுள்ளது. இதன்  மொத்த மதிப்பீடு ஆயிரம் கோடி ஆகும்.  அதில் 910 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு  தயார் செய்யப்பட்டு, அதில் 790 கோடிக்கான பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  குடிநீர் சப்ளை மற்றும் பாதாள சாக்கடை  திட்டம் முக்கியமானதாக செயல்படுத்தப்படு கிறது” என்றார்.

ஸ்மார்ட் சாலை, புதிய பேருந்து நிலை யம் புதுப்பித்தல், பல அடுக்கு கார் பார்க்கிங்  உள்ளிட்ட பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்  டில் உள்ளதால் இங்கே அவர்களிடம் கலந்தா லோசித்து என்னென்ன நிபந்தனைகள் விதிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.  அதன்படி கோட்டை அகழி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். பாதாள சாக்கடை திட்டம் நான்கு நிலை களில் நடைபெற்று வருகிறது. முதல் நிலை களில் 24 வார்டுகளில் பணிகள் நடைபெற்று  வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும் போதே குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர்  இணைப்புக்கான பணிகளும் நடைபெறு கிறது. எனவே இரண்டு பணிகளும் முழுமை யாக முடிந்த பிறகு சாலை சீரமைக்கப்படும் இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படு வது தவிர்க்க முடியாதது. பாதாள சாக்கடை திட்டம் என்பது ஒரு நீண்ட காலம் செயல்படுத் தக் கூடிய திட்ட மாகும். இரண்டு,மூன்று வருடங்கள் சிரமம் இருக்கும். 2021 இறுதியில் தான் பணிகள் நிறைவுபெறும். பணிகள் முடிந்த பிறகு எந்த  கழிவுநீரும் பாலாற்றில் கலக்காது. இது போன்று பெரிய பெரிய திட்டங்களைச் செயல்  படுத்தும்போது பொதுமக்களுக்கு சில இடையூறுகள் சிரமங்கள் வரத்தான் செய்யும்,  பொது மக்கள் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். கோட்டையில் பொழுதுபோக்கு அம்சம் அதிகரிக்கும் வகையில் வாக்கிங் ட்ராக், ஆம்பியர் தியேட்டர், கேலரி உள்ளிட்டவை அமைக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

;