அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
தஞ்சாவூர், மே 18- திருவோணம் அருகே அனுமதி யின்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்ததில் சம்பவ இடத்தி லேயே இரண்டு பேர் உயிரிழந்த னர். இச்சம்பவம் குறித்து வாட்டாத்தி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில்,ஞாயிறன்று (மே 18) காலை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சி டைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது, பட்டாசு குடோன் வெடித்து, இரண்டு பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாட்டாத்திகோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வாட்டாத்திகோட்டை போலீ சார், ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்தி கேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்திய கீர்த்தி தலைமையில், தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெடிவிபத்தில் உடல் சிதறி உயிரிழந்த நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தரராசு (வயது 60) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த நதியா, கனகா, சுகன்யா மற்றும் தவசீலன் ஆகிய 4 பேரையும் மீட்டு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வாட்டாத்திகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனு மதியின்றி இயங்கிய பட்டாசு குடோன் உரிமையாளர் யார்? பட்டாசு விபத்துக்கு காரணம் என்ன? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.