tamilnadu

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மழை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 

;