தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2 நாள் பயிற்சி முகாம் ஓசூர் கே .எம் .ஹரிபட் நினைவகத்தில் சனிக்கிழமையன்று துவங்கியது. மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.ஆர். உதயகுமார், துணைத் தலைவர் சி.முத்து, மாநில துணை பொதுச்செயலாளர் பி.செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சிவப்பிரகாஷ், நாராயணமூர்த்தி, வி.வேலு, சிபிஎம் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன்,ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி, ,பண்ணியாண்டி சங்க மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன் சீனிவாசன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.