tamilnadu

img

“மக்களுடன் முதல்வர்”

“மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வரின் முகவரித்துறை சார்பில் பிப்ரவரி 16 வெள்ளியன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடையாளப்பூர்வமாக 10 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். (செய்தி : 6)