tamilnadu

img

15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்....

சென்னை:
தமிழக காவல் துறையில்காத்திருப்புப் பட்டியலில்இருந்த 12 அதிகாரிகளுக்குபொறுப்பு வழங்கப்பட்டுள் ளது. இதுகுறித்து கூடுதல் தலைமைச்செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், குற்றப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நிய மனம் செய்யப்பட்டுள்ளார்.பிரதீப் வி.பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்கு நராகவும் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அபேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில்ஐ.ஜி.யாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள் ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக தினகரன், ஆயுதப்படை ஐ.ஜி.யாக லோகநாதன், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக ராஜேந்திரன், சேலம் குற்றப்பிரிவு துணை காவல் ஆணைய ராக மூர்த்தி, தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி.யாக செந்தில், மதுரை மண்டல அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக மகேஷ்வரன், சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அருளரசு, காவல்துறை நிர்வாக உதவி ஐஜியாக பி.சரவணன், குழந்தை-மகளிர் குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக சுரேஷ்குமார், வணிக குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

;