கோவிட்-19 பரிசோதனை செய்தாலே, குடும்பத்துடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மொத்தமாக இதுவரை 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 275 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கோவிட்-19 பரிசோதனை மையங்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கோவிட்-19 தொற்றுக்கான பரிசோதனை செய்தாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களின் சுய விவரங்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.