சென்னை, ஜூலை 1- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட் டப்பட்ட அதிகாரிகள் யாருமே இது வரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என வும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற் றுச் சூழல் பாதிப்புகளையும் உடல் நல பாதிப்புகளையும் கண்டித்து ஆலையை மூட வலியுறுத்தி மக் கள் நீண்ட போராட்டம் நடத்தினர்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல் வேறு அரசியல் கட்சிகள், ஜனநா யக இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இப்போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந் தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ் சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர்.
அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த சம்பவம் குறித்து செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பிய போது தொலைக்காட்சியைப் பார்த்தே துப்பாக்கிச் சூட்டை தெரிந்து கொண்டேன் என்று கூறியது தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப் பாக்கி குண்டுகள் மிக அருகிலி ருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்ட 18 வயது ஸ்னோ லின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரி வித்தது. இந்த சம்பவத்துக்கு காரண மான காவல் அதிகாரிகள் மீது இந் திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ. 1 கோடியாக உயர்த்தி தரவும், இறந்தவர் களுக்கு அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனு வில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதி காரிகள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வும் அதனால் கிரிமினல் நடவ டிக்கை கோரும் மனுவை தள்ளு படி செய்ய கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சி யை உருவாக்கியது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அருணா ஜெகதீசன் ஆணையம் தனது ஆய்வறிக்கையை இன் றைய முதலமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் அளித்தது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர் பாக தேசிய மனித உரிமை ஆணை யம் தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதி பதி அருணா ஜெகதீசன் ஆணைய மும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என்றும் வாதி டப்பட்டது. இந்த வாதத்தை மறுத்த மனு தாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி பிறப் பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும்.
அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை” என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கி றது. நடந்த சம்பவத்திற்கு இது வரை எந்த அதிகாரிகளும் வருந்த வில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப் பேற்பார்கள்” எனக் கேள்வி எழுப் பினர். பின்னர், வழக்கின் விசார ணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.