tamilnadu

img

12 வகுப்பு அரசு பொதுத்தேர்வு விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

12 வகுப்பு அரசு பொதுத்தேர்வு   விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 21,836 மாண வர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாண வர்கள் எழுதினர்.  விழுப்புரத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில், பன்னிரண் டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு 121 அரசுப் பள்ளிகளில் 6,854 மாணவர்களும், 8,033 மாணவியர்களும், 17 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,273 மாணவர்களும், 1,187  மாணவியர்களும், 54 தனியார் பள்ளிகளில்  2,538 மாணவர்களும், 1,951 மாணவியர்கள் ஆக மொத்தம் 192 பள்ளிகளில் 10,665 மாண வர்கள், 11,171 மாணவியர்கள் என மொத்த மாக 21,836 மாணவர்கள் எழுதுகின்றனர். கூடுதல் நேரம் இத்தேர்வில், கூடுதலாக ஒரு மணி நேரம்  தேர்வு எழுத 278 மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் (ஆங்கிலம்) தேர்வு எழுது வதில் இருந்து 197 மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 278 கண் பார்வை குறைபாடு,செவித்திறன் குறைவு,மனநலம் குன்றிய மற்றும் நரம்பி யல் கோளாறு உடைய மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். 15 மாற்றுத்திறன் மாணவர் களுக்கு தரைத்தளத்தில் அமர்ந்து தேர்வெழு திட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஒவ்வொரு தேர்வு மையங்களில், மாண வர்கள் நலன் கருதி குடிநீர் வசதி, கழிப்பறை  வசதி, தடையில்லா மின்சார வசதி, காவல் துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல் லாமல், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிடும் பொருட்டு சிறப்பு போக்குவரத்து வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று ஆயுதம் தாங்கிய காவலர் பாது காப்புடன் கூடிய வாகன வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 217 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 106 முதன்மை கண்காணிப் பாளர்கள், 106 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 1200 அறைக் கண்காணிப்பா ளர்கள், 278 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 310 அலுவலக பணியாளர்கள் மொத்தம் 2385, தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள மையத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்  ஷேக் அப்துல் ரஹ்மான், இந்த தேர்வு தான் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும். எனவே, கவனமுடன் வினாத்தாளை படித்து நன்கு தேர்வு எழுத வேண்டும் என்றும் எவ்வித அச்சமுமின்றி, சிந்தனைகளை சிதற விடாமல், தேர்வு முடியும் வரை நாள்தோறும் பாடங்களை நன்றாக படித்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழ கன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.