சென்னை,ஆக.3- தெற்கு ரயில்வேயில் 12 லட்சம் பயணி களுக்கு 64 கோடியே 50 லட்சம் ரூபாய் முன்பதிவு கட்டணம் திரும்ப ஒப்படைக்கப் பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம் பயண தேதியிலிருந்து 6 மாத காலத்துக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. அதன்படி அனைத்து ரயில் நிலையங்களி லும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத் தப்பட்டது. அந்தவகையில் தெற்கு ரயில்வேயில் ஜூன் மாதம் ரூ.43.77 கோடி, ஜூலை மாதம் ரூ.20.72 கோடி என மொத்தம் ரூ.64.49 கோடி டிக்கெட் முன்பதிவு கட்டணம் 11 லட்சத்து 97 ஆயிரம் பயணிகளுக்கு திருப்பி வழங் கப்பட்டுள்ளது. இதில், சென்னை கோட்டத்தில் ரூ.27.10 கோடியும், மதுரை ரூ.6.81, சேலம் ரூ.7.44, திருச்சி ரூ.5.13 , திருவனந்தபுரம் ரூ.11.13, பாலக்காடு கோட்டத்தில் ரூ.6.85 கோடியும் வழங்கப்பட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.