tamilnadu

img

விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிராமங்களைத் தனிமைப்படுத்தும் பணி தீவிரம்... 

சென்னை
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த சந்தைக்குச் சென்று வந்த அரியலூர், கடலூர் மாவட்ட தொழிலாளர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கோயம்பேடு சென்று வந்த 2 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.    

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சனூர், பூண்டி, ஆவுடையார்பட்டு, பஞ்சமா தேவி, கண்டமானடி, ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம் பூண்டி, தும்பூர், கஸ்பா காரணை, அசோக புரி ஆகிய 11 கிராமங்களைத் தனிமைப்படுத்தும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயம்பேட்டில் திரும்பியவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

;