tamilnadu

img

10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு: நீதிமன்றம் தகவல்

சென்னை, மே 10- ஊரடங்கு அமலானது முதல்  இதுவரை தமிழ்நாட்டில் 10 ஆயி ரத்து 652 வழக்குகள் நீதிமன்  றங்கள் வாயிலாக தீர்வு காணப் பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ லைத் தடுக்க, தமிழ்நாட்டில் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு, மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 7ஆம்  தேதி வரை, சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  732 வழக்குகளில், 341 வழக்கு களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள தாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில், 105 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை  பதிவாளர் சி.குமரப்பன் வெளி யிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில்  தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயி ரத்து 109 வழக்குக ளில், 10 ஆயி ரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடங்கிய நிலையில், சில வழக்குகள் நீதிமன்ற அறைகளில் விசாரிக்கப்பட்டாலும், ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் அனைத்து வழக்கு களும் காணொளி காட்சி மூலமே  விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் தலைமை பதி வாளர் குறிப்பிட்டுள்ளார்.