tamilnadu

img

8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறையினர் பணியிட மாற்றம் - தமிழக அரசு 

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக ஜெயந்தி முரளி, ஆயுதப்படை ஏடிஜிபி-ஆக அபய் குமார் சிங், தமிழ்நாடு சீருடை பணியாளர் ஐஜி-ஆக மகேந்திர குமார், திருச்சி காவல் ஆணையாளராகக் கார்த்திகேயன், காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜி-ஆக அருண், திருச்சி சரக டிஐஜி-ஆகச் சரவண சுந்தர், காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக ராதிகா, காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்பி-ஆக நிஷா, சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக மாடசாமி உள்ளிட்ட 10 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;