tamilnadu

கடலில் மூழ்கிய சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்

 சென்னை, ஜூலை 9- கன்னியாகுமரி மாவட் டத்தில் கடலில் மூழ்கி பலி யான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை யில் கேள்வி நேரத்திற்கு பேசிய குளச்சல் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ்,“ குமரி மாவட்டத்தில் கடலில் குளிக்க சென்று பலியான சிறுவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “குமரி மாவட்டம், மண்டைக்காடு புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் சகாய ரெகின், இன்பென்டர் ரகீட், சச்சின் ஆகிய மூவ ரும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்கள்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்றார்.

;