செங்கல்பட்டு, ஏப்.23- திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செயலாளர் இ.சங்கர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் வருமாறு:- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் அணுமின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்த அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 16 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள கிராம மக்களுக்குத் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றது. தற்பேது பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் அமல்படுத்தி யுள்ள ஊரடங்கால் கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையம் தனது நிறுவனத்தைச் சுற்றியுள்ள 16 கி.மீ தொலைவில் உள்ள கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய முன் வந்துள்ளது. இந்நிலையில் உரிய முறையில் நிவாரணம் பெறும் பயனாளிகளைக் கண்டறிந்து கல்பாக்கம் அணுசக்தி நிறுவனத்திட மிருந்து கொரோனா பேரிடர் கால நிவாரணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.சங்கர் வலியுறுத்தியிருக்கிறார்.