tamilnadu

img

வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை  

வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (11.10.2021) மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்க கூடும் என்பதால் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆகையால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் முட்டுக்காடு படகு இல்லம் (போட் ஹவுஸ்), வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

;