tamilnadu

img

விழுப்புரத்தில் இருந்து கொரோனா பாதிப்புடன் தப்பிய தில்லி இளைஞர் பிடிபட்டார் 

செங்கல்பட்டு
தில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுச்சேரியில் நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக விழுப்புரத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கவே விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமையில் இருந்தார்.  

அவரிடம் இருந்து ரத்த மாதிரி கொரோனா சோதனைக்கு பெறப்பட்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மருத்துவர்களின் அலட்சியத்தால் தப்பியோடினர். பின்னர், ரத்த மாதிரி ஆய்வு முடிவில் தப்பியோடிய தில்லி நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவர 3 தனிப்படை போலீசார் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள படாலம் பகுதியில் போலீசார் அந்த தில்லி போலீசார் இன்று கைது  செய்தனர். 
 

;