tamilnadu

img

செங்கல்பட்டு: லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி    

செங்கல்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.  

செங்கல்பட்டு மாவட்டம் நரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோதி பிரகாஷ்(40) மற்றும் நந்தகோபால்(51) ஆகிய இருவரும் சென்னை பல்லவன் மாநகரப் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தனர்.  இந்நிலையில் வியாழக்கிழமை காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டு ராட்டினம் கிணறு மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதை அறிந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைதொடர்ந்து இதுதொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;