சூலூர், பிப். 13 - கோவை பீடம்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் வட் டாட்சியர் மீது சூலூர் போலீசார் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கோவை பீடம்பள்ளி ஊராட்சி தலைவராக இருப் பவர் குமாரவேல். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னர் ஊராட்சி தலைவராக இருந்தபோது அப்போதைய சூலூர் வட்டாட்சியர் பக்தவத்சலம் என்பவருடன் சேர்ந்து கால் நடைப் பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பீடம் பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கணேசன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம டைந்த குமாரவேல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை வன்கொடுமை செய்ததாகக் கணே சன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இப்புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கணேசன் கோவை மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சூலூர் காவல்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தர விற்கு பின்னரும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. இதனையடுத்து கடந்த ஜன. 30 ஆ ம் தேதி நீதிமன் றத்தில் மேல் முறையீட்டு மனுவை கணேசன் அளித்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பீடம் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேல் மற்றும் அப் போதைய சூலூர் வட்டாட்சியர் பக்தவத்சலம் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.