tamilnadu

img

சோமாலியா: தீவிரவாத தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 13 பேர் பலி


சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோமாலிய கடற்கரை நகரமான கிஸ்மாயோவில் உள்ள ஓட்டலில்  காரில் வைக்கப்பட்டிருந்த குண்டை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.  இந்த தீவிரவாத தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இதற்கிடையே குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்னர். 
 

;