tamilnadu

img

சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.


சிலி நாட்டின் கடற்கரை நகரமான பியூரட்டோ மாண்ட்டில் உள்ள லாபலோமா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்ச்சிபிலாகோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அதன் எஞ்சினிற்கான மின்சார பகிர்வில் கோளாறு ஏற்பட்டு நிலை தடுமாறியது. பின்பு தனது கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த வீடு முழுவதுமாக சேதமடைந்தது.


மேலும், இந்த விபத்து நடந்த உடனேயே விமானம் தீ பிடித்ததால் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் பலியாகினர். விபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.


;