tamilnadu

சீனக் கடற்படை விழாவில் பங்கேற்கும் இந்தியக் கப்பல்கள்

பெய்ஷிங், ஏப்.20- சீன மக்கள் விடுதலைப் படையின் கடற்படை பிரிவு நிறுவப்பட்ட 70 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சீனாவின் ட்சிங் தாவ் நகரில் பன்னாட்டு கப்பற்படை அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா என்னும் போர்க்கப்பல் மற்றும் இந்தியக் கப்பற்படை எண்ணெய்க் கப்பலான ஐஎன்எஸ் சக்தி ஆகிய இரு கப்பல்கள் கலந்து கொள்ளும் என்று இந்தியக் கடற்படை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.ஏப்ரல் 21 (ஞாயிறன்று) சீனாவின் ட்சிங் தாவ் நகரை வந்தடையும் இக்கப்பல்கள் ஏப்ரல் 23 ஆம் நாள் நடக்கும் பன்னாட்டுக் கப்பல்கள் அணிவகுப்பில் பங்கேற்கும்.

;