tamilnadu

img

ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதை படிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதை படிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதை படிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதை படிமமாகி, பதனம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் புதை படிமங்கள் இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


;