சுவிட்சர்லாந்தில் ரயிலில் கிடந்த தங்கத்தை யாரேனும் தவறவிட்டிருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லுசர்னோ ரயில் நிலையத்திற்குவந்த ரயில் ஒன்றில் தங்க கட்டிகள் இருந்துள்ளன. சுமார் 1.44 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை தவற விட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இதுவரை தங்க கட்டியின் உரிமையாளர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தற்போது தங்க கட்டியை தவறவிட்டவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என லுசர்னே போலிசார் அறிவித்துள்ளனர்.