டெக்சா மெத்தசோன் மருந்ததை லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டெக்சா மெத்தசோன் மருந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு அந்த மருந்து பயனளிக்கும் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு அளிக்கும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.