tamilnadu

img

சீனாவில் குறைந்து வரும் கொரோனாபாதிப்பு - 16 தற்காலிக மருத்துவமனைகள் மூடல்

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சீன அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.   இதனால், ஹூபே மாகாணத்தின் வுஹானில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 16 தற்காலிக மருத்துவமனைகளை அரசு மூடியுள்ளது. 
வுஹானில் அமைக்கப்பட்டிருந்த உச்சாங் தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 49 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது. உச்சாங் ஹாங்ஷான் விளையாட்டு மைதானமானது கடந்த மாதம் 5-ம்தேதி முதல் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதில் 784 படுக்கைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 1,124 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 
மீதமுள்ள 291 பேர் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இன்னொரு தற்காலிக மருத்துவமனை கடந்த பிப்ரவரி 14-ம்தேதி அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையும் இன்று பிற்பகலுடன் மூடப்பட்டது என சீன அரசு தெரிவித்தள்ளது.