உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரிகை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
சீனாவின் உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரிகை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் இன்று அதிகாலை 2:58 மணிக்கு மரணமடைந்தார்.
இந்த வைரஸ் குறித்த மருத்துவர் லீ வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, உகானில் சார்ஸ் போன்ற புதிய வைரஸ் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளத்திலும் பகிர்ந்து இருந்தார். ஆனால், லீ வென்லியாங்கிற்கு சம்மன் விடுத்த சீன போலீசார், இது போன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.