சிரியாவின் எல்லை பகுதிகளில், ராணுவத் தாக்குதல் நடத்துவதை துருக்கி கைவிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வடக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றது. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். இந்நிலையில் சிரியாவில் ராணுவ தாக்குதலை நடத்துவதை துருக்கி வைவிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.