சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் தென் மேற்கு பகுதியில் உள்ள குய்சௌ மாகாணத்தில் செவ்வாயன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.