சிலியிலிருந்து 38 பயணித்த ராணுவ விமானம் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் தென் பகுதியில் அமைந்துள்ள அண்டார்ட்டிகா விமானப்படை தளத்திற்கு சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் மாயமாகி உள்ளது.
ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச்சேர்ந்த அந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் புறப்பட்டுச்சென்றதாகவும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர். மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானம் குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார்.