tamilnadu

img

ஆசிய ஒற்றுமை கண்டு அஞ்சும் அமெரிக்கா பிளவுபடுத்த முயற்சிப்பதாக சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங், மே 31- இந்தியாவையும் சீனாவையும் மோதவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக சீனாவின்  குளோபல் டைம்ஸ் வார இதழ் குற்றம் சாட்டியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த சக்தி ஆசியாவிலும் வெளிநாட்டிலும் தங்கள் நலன்களைப் பாதிக்கும் என்று அமெரிக்கா நம்பு கிறது என்றும் குளோபல் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய-சீன உறவில் மோதலே அமெரிக்காவிற்கு நல்லது என்று  அவர்கள் கருதுகிறார்கள். எனவே இரு நாடுகளுக்கும் இடையில் பிளவு களை ஏற்படுத்த முயற்சிப்பதை அவர்கள் ஒருபோதும் கைவிடவில்லை. அமெரிக்கா இந்த பகுதியின் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தும். இதில் இந்தியாவும் சீனாவும் விழிப்புடன் இருக்க  வேண்டும்,’அமெரிக்கா முதலில்’ என்ற அவர்களின் கொள்கை இந்தியாவின் நலன்களுடன் பொருந்துவதல்ல.

ஆசியாவின் மிகப்பெரிய சக்திகளான இந்தியாவும் சீனாவும் எல்லையை பகிர்ந்து வருகின்றன என்பதை டிரம்ப் இறுதி கட்டத்தில் உணர்ந்துள்ளார் என அந்த இதழ் கிண்டல் செய்துள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை என்று டிரம்ப் சொன்னபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியடைந்தார் என வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் இருவர் எழுதிய “எ வெரி ஸ்டேபிள் ஜீனியஸ்”  என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை கட்டுரை நினைவு கூர்ந்துள்ளது.  கடந்த ஆண்டு காஷ்மீர் தொடர்பான டிரம்பின் சமரசத்தை இந்தியா நிரா கரித்தது. அமெரிக்கா நம்பகமான பங்காளி அல்ல என்பதை இந்தியா உணர்ந்திருக்க வேண்டும். சமரசத்தில் அமெரிக்காவின் மோசமான வரலாறு குறித்தும் இந்தியா அறிந்திருக்கும். பிரச்ச னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா குழப்பத்தை உருவாக்கி, இருதரப்பு பிரச்சினைகளை சர்வதேச மோதல்களாக அமெரிக்கா மாற்றுகிறது என்றும் குளோபல் டைம்ஸ் எழுதி யுள்ளது.