tamilnadu

img

கொரோனாவுக்கு 42 நாள் சிசு பலி

கனக்டிகட் (அமெரிக்கா), ஏப்.2- அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் பிறந்து 42 நாட்களே ஆன சிறு ஒன்று கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தது.

அமெரிக்காவில் நோய்த் தொற்றுக்கு பாதிப்போர் மற் றும் உயிரிழப்போரின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. உலக அள வில் நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலி டத்தில் உள்ளது.  இந்த நிலையில், கனக்டிகட் மாநிலம், ஹார்ட்போட் பகுதி யைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த 42 நாள் ஆன குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிசுவுக்கு கொரோனோ நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க் கிழமை நடத்திய பரிசோதனை யில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிசு வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.  இந்த தகவலை கனக்டிகட் மாநில ஆளுநர் நெட் லாமண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

;