tamilnadu

img

சீனாவில் நிலச்சரிவு - 11 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 42 பேர் மாயமாகி உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில், நேற்று நள்ளிரவு திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 42 பேர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.