சிவகாசி, மே.11- சிவகாசி அருகே உள்ள செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள விவ சாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அரிசி வழங்கி உதவி புரிந்தனர். திருத்தங்கல் அருகே உள்ளது செங்க மலநாச்சியார்புரம். இப்பகுதியில் 130 விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க முழு ஊர டங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இத னால், இத்தொழிலாளர்கள் வேலை யின்றி சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் பத்மா, ஆசிரியர்கள் சீனிவாசன், தனபால், ஜெயச்சந்திரன், முருகேசன் ஆகியோர் ஒவ்வொரு கூலித் தொழிலாளர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கிட முடிவு செய்து, அதற்கான நிதியை வழங்கினர். இதை யடுத்து, ஆசிரியர்கள் கூடலிங்கம், க.சிவ பெருமான், கோவிந்தசாமி, ஜெயராஜ், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அரிசியை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.