tamilnadu

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் படுகாயம்.
சிவகாசி அருகே விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இடையங்குளத்தை சேர்ந்த தங்கவேல் (வயது 55), கருப்பசாமி (வயது 32) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரித்தாய், கருப்பம்மாள் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.