கோவை, ஜூலை 1- ஆனைக்கட்டியை அடுத்த ஜம்புகண்டி பிரிவில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண் டும் என அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்கள், விபத்தால் மனைவியை இழந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் அனைத்து கட்சி, பொதுநல அமைப்பினர்இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். கோவை மாவட்டம், ஆணை கட்டியை அடுத்த ஜம்புகண்டி பிரிவு பகுதியில் கடந்த 24ஆம் தேதி மது போதை ஆசாமிகளால் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷ் என்பவரின் மனைவி ஷோபனா சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். ஷோப னாவின் உடலுடன் மருத்துவர் ரமேஷ் மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி மலை வாழ் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இத னையடுத்து மதுக்கடை தற்காலிக மாக மூடுவதற்கு உத்தரவிட்ட வடக்கு வட்டாட்சியர் விஜயகு மார் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித் தார். இந்நிலையில் திங்களன்று மருத்துவர் ரமேஷ் தலைமையில் அனைத்து கட்சி, பொதுநல அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதன்பின் ரமேஷ் கூறுகை யில், ஜம்புகண்டியில் மதுக் கடையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டாஸ்மாக் கடையை அகற்ற பொது மக்கள் போராடியும் அதை மூடவில்லை. இந்நிலையில் மது அருந்திவிட்டு இரு சக்கர வாக னத்தில் வேகமாக வந்த இளை ஞர்கள் மோதியதால் எனது மனைவி ஷோபனா உயிரிழந்தார். கிராம மக்களுக்காக பணிபுரிய வேண்டும் என்பதற்காகவே இங்கு பணிபுரிகின்றேன். கிராம மக்க ளின் குழந்தைகளும் பாதிக்க கூடாது. எனக்கு யார் மீதும் கோப மில்லை. கேரளாவில் மதுக்கடை களை குறைத்துள்ளதுபோல தமிழகத்திலும் குறைக்க வேண் டும். போதையில் விபத்து ஏற்ப டுத்தி எனது துணைவியார் பலி யாக காரணமாக இருந்த தற்போது காயமடைந்த இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்ககூட தயாராக இருக்கின்றேன் எனத் தெரிவித் தார். முன்னதாக மருத்துவர் ரமேஷ் உடன் திமுக பகுதிகழக செயலா ளர் பையாக்கவுண்டர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சுசி.கலையரசன்,தபெதிக பொதுச்செயலாளர்கு.ராமகி ருட்டிணன், திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண் மணி, ஆதித்தமிழர் கட்சியின் செய லாளர் ரவிக்குமார்உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
இதனிடையே ஜம்புகண்டி பிரிவு பகுதியில் டாஸ்மாக் பாரை நடத்தி வரும் நபர்கள், பொதுமக்கள் சிலரை வாகனம் வைத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மதுக்கடை வேண்டும் என மனு அளித்தனர். வந்தவர்களில் ஒரு சிலருக்கு எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்திருந்தனர். மீட்டீங் நடக்கிறது சென்று வாருங்கள் என்று தோட்டத்துக்காரர் காசு கொடுத்து அனுப்பி வைத்தார் என ஆனைகட்டி மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். மதுக்கடை வேண்டுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜம்புகண்டி பிரிவில் இருக்கும் மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். கடந்த ஒரு வார காலமாக மதுக்கடை இல்லாததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தனர். மதுக்கடை வேண்டும் என பணம் கொடுத்து பார் உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்ட பெண்கள் மதுக்கடை வேண்டாம் என செய்தியாளர்களிடம் தெரிவித்ததால் பார் உரிமையாளர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.