கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூ ராட்சிக்குட்பட்ட காரைக்கால் மெயின் ரோடு மற்றும் கடைவீதி பகுதிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் தலைமையில், இளநிலை உதவியாளர் தயாள ராஜகோபாலன், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், அலுவலக உதவியாளர் சின்னதுரை மற்றும் துப்புரவு பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். இதில் மளிகைக் கடை, காய்கறிக்கடை, உணவகங் கள், பழக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின் போது சுமார் 58.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ 13 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.