tamilnadu

img

ஆட்டோ தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல் காரைக்குடி காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, மே 15-சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளி ஆரோக்கியதாசை காவல்நிலையத்தில் வைத்து பூட்ஸ் காலால் மிதித்து தாக்கி கொடுமைப்படுத்திய காவல்துறையினரைக்   கண்டித்து மே 14 செவ்வாயன்று காரைக்குடியில் தடையை மீறிஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். காரைக்குடி நகர் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி,மாவட்டத்தலைவர் சசிவர்ணம், சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா ஆகியோர் கண்டன உரையாற்றினார். தனியார் மோட்டார்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன்,சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் குமாரவேலு, நகர் பொருளாளர் வெங்கட், மகாத்மா ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப் பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.