கீழடி, அக்.13- சிவகங்கை மாவட்டம் கீழ டியில் ஐந்தாம் கட்ட அகழா ய்வுப் பணிகள் ஞாயிற்றுக்கி ழமையோடு நிறைவடை ந்தது. ஆய்வுப் பணிக்கு கீழடியைச் சேர்ந்த பேரா சிரியர் கதிரேசன் இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கியு ள்ளார். இவருக்கு மொத்தம் 22 ஏக்கர் நிலைங்கள் உள்ளன. ஆறாம் கட்ட அகழ்வாய்விற்கு தமிழக அரசு நிலம் கேட்டதால் வழ ங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இவருக்குச் சொந்த மான இடத்தில் ‘கல்திட்டை’ ஒன்றுள்ளது. மூன்று இன்ச் கனத்தில் சுமார் இரண்டு ஆழத்திற்கு அந்த கல்தி ட்டை உள்ளது. அந்த இட த்தைத் தோண்டினால்தான் கல்திட்டை எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பது தெரியவரும். ஆறாம்கட்ட அகழ்வாய்விற்காக இந்த நிலம் தேர்வு செய்யப்ப ட்டால் இன்னும் பல புதிய தக வல்கள் வெளிவர வாய்ப்பு ள்ளது.