tamilnadu

பாலியல் குற்றச்சாட்டு: ஊராட்சி செயலரை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 2- சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றி யம் குறுந்தம்பட்டு ஊராட்சி செயலரை உட னடியாகக் கைது செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. குறுந்தம்பட்டு ஊராட்சி செயலர் முருகன் (45). இவர் ஊராட்சியில் பணிபுரியும் திடக் கழிவு மேலாண்மைத்திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது, பாலி யல் சீண்டல் செய்வது என முறைதவறி நடந்துவந்துள்ளார். எச்சரிக்கும் பெண் களை ஆபாசப்படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள் ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகா ரின் அடிப்படையில் கல்லல் காவல்நிலை யத்தில் 15 தினங்களுக்கு முன்பு முருகன் மீது 274,354ஏ,354பி,506(2) ஆகிய பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முருகனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் கே.வீரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.

;