tamilnadu

தெருவில் ஓடும் சாக்கடை கண்டுகொள்ளாத சிவகங்கை நகராட்சி

சிவகங்கை:
சிவகங்கை 27-ஆவது வார்டின் மேற்குப்பகுதியில் பாதாளச் சாக்கடை உடைந்து தெருவெங்கும் சாக்கடை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.சிவகங்கை நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் 2007- ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது தற்போது வரை பணிகள் முடிந்தபாடில்லை. இந்த நிலையில் 27-வது வார்டுமேற்கு பகுதியில் பாதாள சாக்கடை உடைந்து தெருவெங்கும் சாக்கடை பெருகிநிற்கிறது. மக்கள் நடந்து செல்லமுடியவில்லை. நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.கழிவுநீரால் தொற்று பரவுவதைத் தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றியச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;