சிவகங்கை, ஜூன் 25- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் மரணமடைந்த வருவாய் துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டி யலை வெளியிட வேண்டும். வரு வாய்த் துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிவ கங்கை மாவட்டத்தில் வரு வாய்த்துறை அலுவலர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணி யாற்றினர்.