tamilnadu

img

அரவக்குறிச்சியில்  அரசுக் கல்லூரி அமைக்க கோரிக்கை

 கரூர், டிச.22-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட பேரவை, கரூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் கரூர் நகர செயலாளர் கே.ராஜா தலைமை வகித்தார். குளித் தலை ஒன்றிய செயலாளர் மு.க.சிவா வரவேற்றுப் பேசி னார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் எஸ்.பாலா சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலை வர் எம்.ஜோதிபாசு வாழ்த்தி பேசினார். வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி வி.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். சங்க நிர்வாகி ராமசாமி நன்றி கூறினார். மாவட்ட புதிய தலைவராக மு.க. சிவா, செயலாளர் கே.ராஜா, பொருளாளர் ராஜீவ் காந்தி, துணைத் தலைவர் ரஞ்சிதா, துணைச் செயலாளர் வி.நாக ராஜன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில், தமிழக அரசு தேர்வு செய்த இடத்தில் புதிய பேருந்து நிலை யம் அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் உழவர் சந்தை அருகில் கரூர் நகராட்சியால் கட்டப் பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை உடனே திறக்க வேண்டும். அரவக்குறிச்சி, தரகம்பட்டியில் அரசு கலை ககல்லூரி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;