சிவகங்கை, ஜூன் 14- சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊரா ட்சிகள் உள்ளன, இந்த ஊராட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர். தலைவராக அதப்படக்கி மகேஷ்வரி, செயலாளராக கொல்லங்குடி மெய்ஞானமூர்த்தி, பொருளாளராக விட்டனேரி அ.வரதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு அடையாள அட்டை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். கொரோனா நிவாரண நிதி ரூ43ஆயிரம் வழங்குவதென தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.