tamilnadu

காரைக்குடியில்  அரசுப் பேருந்துகளை  இயக்க நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தல் 

 சிவகங்கை, ஜூலை 4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்ட அலு வலகத்தில் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர பாண்டி கேட்டுக் கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்  தில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன.இதில் பெரும்பாலான கிராம ங்களுக்கு போக்குவரத்து வசதியில்லை.பெரும் பாலான பேருந்துகள் காலம் கடந்து ஓடிக் கொண்டி ருக்கிறது. ஒரே பேருந்து பல  கிராமங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் துவக்கி வைப்பதற்காக ஏராளமான புதிய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சமூக அக்  கறையுள்ள கட்சிகள் பேருந்து ஓடாமல் தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் பேருந்து பழுதடையும் என விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பின்னரே பேருந்துகளை இயக்கினர். அதேபோன்று தற்போ தும் ஏராளமான பேருந்துகள் காரைக்குடி கோட்ட அலு வலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளை யும் உடனடியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.