tamilnadu

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  

    சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் தர்மபட்டியில் உள்ள சின்டெக்ஸை, இதே ஊரைச் சேர்ந்த கோபிநாதன் வயது 34 ஞாயிறன்று தொட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி கூறும்போது, சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் தர்மபட்டியில் உள் ளாட்சி நிர்வாக கவனக்குறைவால் 34 வயது விவசாயி கோபிநாதன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். சின்டெக்ஸில் எர்த் அடிப்பதாக பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. இறந்த கோபி நாதனுக்கு மூன்று குழந்தைகள் உள் ளன. இவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள் கிறேன் என்றார்.